Translated by Geetha Ganesh கோவிட்-19 தொற்றுநோய் சென்னையில் பலரின் வாழ்வாதாரத்தை சிதைத்தது. கோவிட்-19 பொருளாதாரத் தாக்கத்தைத் தணிக்க, மத்திய காலக் கொள்கை பரிந்துரைகளை வழங்க, டாக்டர் சி ரங்கராஜன் குழுவை மாநில அரசு அமைத்தது. குழுவின் பரிந்துரைகளில் ஒன்று நகர்ப்புற ஏழைகளுக்கு தினசரி ஊதிய திட்டத்தை உருவாக்குவதாகும். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை (TNUES) அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) பிரதிபலிக்கிறது மற்றும் ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் பணிகள் துறையின் நிர்வாக பொறியாளர் (EE) கூறுகையில், “தற்போது சென்னையில் இரண்டு மண்டலங்களில் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மண்டலம் 4 மற்றும் 6 ஆகியவை நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் இந்த திட்டத்தை சோதிக்க…
Read moreTAMIL
கொரட்டூர் ஏரி 20 ஆண்டுகளுக்கு முன்பாக சமையலுக்கு குடிநீருக்கு பயன்படுத்தி வந்துள்ளனர் ஆனால் தொழிற்சாலை மற்றும் பால்பண்ணை நச்சு கழிவுகளால் ஏரி மாசடைந்தது இதனால் நீரை பயன்படுத்த முடியவில்லை. நிலத்தடி நீர் சுற்றி பாதித்துள்ளது கழிவு நீரால் ஆகாயத்தாமரை அதிகம் வளர்ந்துள்ளதால் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது ஏரியைச் சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்களின் வாழ்வாதாரம் ஏரியை நம்பி தான் உள்ளது ஏரி மாசடைந்து மண் மற்றும் தண்ணீர் பாதிப்பால் மீன் இனப்பெருக்கம் குறைந்துள்ளது. ஆக்கிரமிப்பால் ஏற்படும் மாசு ஏரியைச் சுற்றிலும் அரசியல் போர்வையில் சமூக விரோதிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக போய்விடுகிறது. ஓராண்டுக்கு முன்பாக கோர்ட்டு ஏரியில் ஆக்கிரமித்துள்ள 12 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது 21 நாளைக்குள் காலி செய்ய வேண்டும் என்று ஆனால் இதுவரை எந்த…
Read moreTranslated by Sandhya Raju பிளாஸ்டிக் பைகள், உபயோகப்பட்ட டயப்பர்கள், வீணாக்கப்பட்ட உணவுகள், சில சமயம் உபயோகப்பட்ட மருத்துவ ஊசிகள். இது போன்ற பொருட்களை தினந்தோறும் தன் பணியின் போது பிரிக்கிறார் தூய்மை பணியாளர் ரமேஷ்*. “கைகள் வெயர்த்து போகும் என்பதால் எப்பொழுதும் நாங்கள் கையுறையை உபயோகிப்பதில்லை,” என்கிறார் ரமேஷ். இது போன்ற கடுமையான சூழலில் சொற்ப சம்பளத்திற்கு தான் நகரத்தில் தூய்மை பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். பெரும் சவாலாக உள்ள போக்குவரத்து பெரும்பாலான தூய்மை பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெகு தூரம் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. “காலையில் 3 மணிக்கு எழுந்து, சமைத்து, வீட்டை சுத்தம் செய்து, இரண்டு பேருந்து மாறி பணியிடத்திற்கு செல்ல வேண்டும். காலை 6-6.30 மணிக்குள் பயோமெட்ரிக்கில் வருகையை பதிவு செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் தாமதானாலும், எங்கள் மேற்பார்வையாளர் வீட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவார் அல்லது அந்த நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து…
Read moreTranslated by Sandhya Raju தமிழ் மொழி மற்றும் அதன் இலக்கியத்தை பறைசாற்றும் விதமாக முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்கள் இயல் இசை நாடகம் ஆகியவற்றிற்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் அமையவிருக்கும் பேனா நினைவுச்சின்னம், பல்வேறு தரப்பிலிருந்து பல விதமான எதிர்வினைகளை தூண்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையிலிருந்து 360 மீ தொலைவில் வங்காள விரிகுடாவில் 134 அடி உயரத்தில் “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம்” அமைக்கப்படவுள்ளது. இதனால் சுற்றுச்சூழல், கடல் சூழலியல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் படிக்க: Women of Ennore are living testimony to the many costs of pollution பேனா நினைவுசின்னம் கட்டமைப்பு சென்னையில் கட்டப்படவுள்ள பேனா நினைவுச்சின்னத்தில் இடம்பெறவுள்ல கூறுகள் பேனா பீடம் பாதசாரி மற்றும் கண்ணாடி நடைபாதை பின்னல் வகை நடைபாதை உயரமான நடைபாதை PWD வெளியிட்டுள்ள முன்மொழியப்பட்டுள்ள திட்ட…
Read moreTranslated by Sandhya Raju “அதிகரித்து வரும் பெட்ரோல் விலை, எலக்ட்ரிக் பைக்கை வாங்க தூண்டியது: என்கிறார் சென்னையில் வசிக்கும் வி ஆகாஷ். இவர் ஏதர் 450X எலக்ட்ரிக் பைக் உபயோக்கிறார். இதே காரணத்தை பகிரும் எஸ் கௌஷிக், ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா HX பைக்கை உபோயக்கிறார். “புதிதாக முயற்சி செய்ய வேண்டும் என நினைத்தேன்.மேலும் இதற்கான மானியம் இதன் விலையை கட்டுப்படியாக்கியது. கடந்த வருடம் நான் இந்த பைக்கை வாங்கிய போது ₹40,000 முதல் ₹45,000 வரை தள்ளுபடி கிடைத்தது.” என்றார். EV வண்டியை வாங்கும் பலர் பெட்ரோல் உயர்வே உந்துதலாக அமைந்ததாக கூறுகின்றனர். “பராமரிப்பு செலவு இல்லை. முறையாக பராமரித்தால் பெட்ரோல் வண்டி போல் அடிக்கடி செர்வீஸ் செய்ய வேண்டியதில்லை, எனக் கூறும் ஆகாஷ், இதில் உள்ல கூகிள் மேப் கூடுதல் பயனளிப்பதாக கூறுகிறார். எலக்ட்ரிக் பைக்கிற்கு மாற சேமிப்பு ஒரு பெரும் காரணமாக உள்ளதால், இதன் பயன்பாட்டை…
Read moreTranslated by Sandhya Raju சூடான டீ, இசையுடன் மழைக்காலத்தை வீட்டினுள் ரசிப்பது தான் நம் பெரும்பாலனவர்களின் விருப்பம். மழையை நாம் ரசிக்கும் அதே நேரம், மழை நீர் தேங்காமலும், மின்சாரம் தடைபடாமலும், கழிவுகள் தெருக்களில் தேங்காமலும் இருக்க, பலர் மழைக் காலத்தில் நமக்காக பணியாற்றுகின்றனர். தங்கள் சொந்த வேலைகள், குடும்பத்தின் தேவைகள் ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல், பல களப்பணியாளர்கள் மழைக்கால வேலைகளில் ஈடுபடுகின்றனர். பருவ நிலை மாற்றம் காரணமாக, பல தீவிர கால நிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளும் நிலையில், களப் பணியாளர்களின் பணி மேலும் சவாலாக மாறும் நிலை உள்ளது. களப்பணியாளர்களின் கடினங்கள் 21 வருடம் முன், சென்னை கழிவு நீர் மேலாண்மை வாரியத்தில் தற்காலிக பணியாளராக சேர்ந்த வெங்கடேஷின் நாள் தினமும் 5.30 மணிக்கு தொடங்குகிறது. ஊரப்பாக்கத்தில் வசிக்கும் இவர், தினமும் 30 கி.மீ பயணித்து ராயபேட்டைக்கு பணிக்கு வருகிறார், ஊதியமாக ₹2,800 பெற்ற அவர், 2021-ஆம் ஆண்டு ₹6,000…
Read moreTranslated by Sandhya Raju தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO) செப்டம்பர் 10-ம் தேதி மின் கட்டண உயர்வை அறிவித்தது. இதனால் மின் கட்டணம் 50% அதிகமாகலாம் என கூறப்பட்டது. எந்த அளவு மின் கட்டணம் உயரும் என்ற கவலையில் மக்கள் உள்ள்னர். இதனை சமாளிக்க என்ன நடவடிக்களை நாம் மேற்கொள்ளலாம் என குறிப்புகளை உங்களுக்காக இங்கே பகிர்கிறோம். முதல் 100 யூனிட் இலவசம் என்றாலும், 400 யூனிட் வரை ஒவ்வொரு 100 யூனிட்டிற்கும் அடிப்படை கட்டணம் ₹2.50-லிருந்து ₹4.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 400 யூனிட் முதல் 500 யூனிட் வரை, ₹6 ஆகவும், 1000 யூனிட் வரை ஒவ்வொரு 100 யூனிட்டிற்கும் ₹1 முதல் ₹2 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான புது கட்டணம். தகவல்: TANGEDCO Read more: Did your July electricity bill shock you? Here is…
Read moreTranslated by Sandhya Raju “தங்கள் வாழ்கை நிலை உயரவும் தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி பெறவும், தமிழகத்தின் பல இடங்களிலிருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் மக்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் மக்கள், பெரும்பாலும் நதிக்கரை ஒரமாக தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றனர். திடீர் திடீரென இவர்கள் குடிசைகள் தீப்பற்றி எரிவதால், இந்த இடம் “திடீர் நகர்” என அழைக்கப் பெற்றது.” சைதாபேட்டை திடீர் நகரில் வசிக்கும் 60 வயது எஸ் கதிர்வேலன். ஆனால், ராஜா அண்ணாமலை புரத்தில் வசிக்கும் எல். விஜயா வேறொரு காரணத்தை முன் வைக்கிறார். “இங்குள்ள பெண்களின் அணிகலங்கள் திடீர் திடீரென காணாமல் போவதாலும், அடிக்கடி குடித்துவிட்டு இங்குள்ள மக்கள் தகராறில் ஈடுபடுவதாலும், இந்த பெயர் காரணம் இருக்கலாம் என கூறுகிறார்.” பெயர் காரணம் எதுவாக இருப்பினும் அங்கு நடக்கும் திடீர் சம்பவங்கள் இவர்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதாக உள்ளது. திடீர் நகர் சென்னையில் பல பகுதிகளில் இருந்தாலும்,…
Read moreTranslated by Sandhya Raju விளிம்பு நிலை மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்கள், சிக்கலான சட்ட அமைப்பில் சிக்கிக்கொள்ளும் நிலையை வெகுவாக வெளிக்கொணர்ந்தது ஜெய்பீம் திரைப்படம். செங்கனி என்ற கதாபாத்திரத்திற்கு ஆதரவாக சந்துரு என்ற வழக்கறிஞர் பணியாற்றினார். ஆனால், நிஜ வாழ்க்கையில் இவர்களின் நிலை என்ன? அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் அல்லது மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் உதவி பெற ஒவ்வொரு நபருக்கும் அரசியலைப்புப் படி உரிமை உள்ளது. “இலவச சட்ட உதவி என்பது அரசு அளிக்கும் தொண்டு அல்ல. இது அனைத்து மக்களுக்கான அடிப்படை உரிமை,” என்கிறார் சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞர் எஸ் ஜோதிலக்ஷ்மி, 2019-20 ல் இலவச சட்ட உதவி வழக்கறிஞராக இவர் நியமிக்கப்பட்டார். அரசு வழங்கும் சேவை குறித்து பலரருக்கு விழிப்புணர்வு இல்லை, என இந்தக் கட்டுரைக்காக நாம் சந்தித்த வழக்கறிஞர்கள் கூறினர். அதன் நோக்க பயனை…
Read moreTranslated by Sandhya Raju “தமிழக அரசே தமிழக அரசே, சாக வேண்டுமா நாங்கள்? அப்போ தான் பார்ப்பாயா?” சென்னை குடி நீர் & கழிவு நீர் பெரு வாரியம் தலைமை அலுவலகத்தின் முன்பு தொடர்ந்து 10 நாட்கள் 1500 தற்காலிக தொழிலாளர்கள் எழுப்பிய கோஷம் இது. தனியார் ஒப்பந்தகாரர்களுக்கு ஒவுட்சோர்ஸ் முடிவை எதிர்த்தும் இவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் இவர்கள் போராட்டம் நடத்தினர். கடந்த சில ஆண்டுகளாக வேகமான வளர்ச்சியை சென்னை அடைந்தாலும், பல முக்கிய துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் அல்லது கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. முக்கியமான அத்தியாவசிய பணிகளான திடக்கழிவு மேலாண்மை, குடி நீர் வினியோகம், சுகாதாரம், மின்வாரியம் என பல துறைகளில் தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிகிறார்கள். சென்னை குடி நீர் வாரிய தற்காலிக பணியார்களின் போராட்டம் சரியான நேரத்தில் சாலையில் மண் அகற்றப்பட்டு, கழிவு நீர் அடைப்புகள் அகற்றப்பட்டு,குடி நீர்…
Read more