Translated by Krishna Kumar தேன்மொழி (புனை) அவள் பெயர், பாந்தியன் சாலையில் ஒரு துப்புரவு பணியாளி. ஒரு தேய்ந்து போன துடைப்பம், அலுமினிய கூடை மற்றும் கையுறைகள், அவளின் ஆயுதங்கள் . அவற்றின் நிலை, அவள் சென்னையின் நெருக்கடியான சாலைகளை சுத்தம் செய்யும்போது எதிர்கொள்ளும் இன்னல்களின் பற்பல கதைகள் சொல்லும். அன்று, நவம்பர் 28ஆம் தேதி, ஒரு புதன் கிழமை சற்று தொய்வடைந்து பெருக்கிக்கொண்டிருக்கும்போது பேசுகையில் "அடுத்தமாதம் இந்த வேலையில் நான் இருப்பேனா? என்று சந்தேகம்" என்று கூறி சலித்து பெருமூச்சு விட்டாள். சென்னை மாநகராட்சியால் நியமனம் செய்யப்பட்ட 8,246 ஒப்பந்த துப்புரவு பணியாளர்களில் ஒருவர் அவர். நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் வேலை பார்த்தால் ரூ 362 கிடைக்கும். இதில் வார விடுமுறை கிடையாது, PF கிடையாது. தற்பொழுது பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு மண்டலங்களில் குப்பை மேலாண்மையை தனியார்மயப்படுத்தும் திட்டத்தால் தேன்மொழி போன்ற பலர் மனமுடைந்துள்ளனர்.…
Read moreTAMIL
வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல், தமிழ்நாடு அரசு, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீது போட்டிருக்கும் தடை விதிகளை அமல்படுத்தும். இது, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், மாநிலத்தில் முன்னொருபோதும் எடுக்கப்படாத நடவடிக்கை. பிளாஸ்டிக் தடை பற்றி பல குடிமக்கள் மத்தியில் இன்னும் குழப்பம் மற்றும் கவலை உள்ளது. அதனை போக்க செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் மாநில அரசாங்கம் தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டிருக்கிறது, ஆனால் தடையை அமல்படுத்த அல்லது ஒரு மாற்று வழிமுறைகளை பின்பற்றுவதில் ஒரு உறுதியான வரைபடத்தை இதுவரை வழங்க தவறிவிட்டது. பல நிறுவனங்கள், குறிப்பாக தொண்டு நிறுவனங்கள், இந்த பிரச்சினையைப் பற்றி பொது மக்களின் உணர்தலை மேம்படுத்த பணியாற்றி வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை மற்றும் பல சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள நம்ம ஊரு பவுண்டேஷனின் நிறுவனர் பி. நடராஜனிடம் வரவிருக்கும் பிளாஸ்டிக் தடையைச் சந்திக்க வேண்டிய யுக்திகள் மற்றும் நம்ம ஊரு பவுண்டேஷனின்…
Read moreதமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுள்ள ஒத்த பார்வையுள்ள சிந்தனையாளர்கள் ஒன்று கூடிய ‘மன்றம்’ நிகழ்ச்சி நவம்பர் மாதம் 17ஆம் நாள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சி பூங்கா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆறு பேச்சாளர்கள் அவர்களின் வேறுபட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் உள்ள, பல வயதினை கொண்ட பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழவும், உரையாடலில் பங்கு கொள்ளவும் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். நிகழ்ச்சியில் உரையாட ஆறு பேச்சாளர்கள் வெவ்வேறு தலைப்புகளை தேர்ந்தெடுத்திருந்தனர். கணினி நுண்ணறிவு, இந்திய சட்ட சாசனம், மரங்களின் மகிமை, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வெளிப்படுத்தும் திறன்கள் போன்ற தலைப்புகளில் அறிவுபூர்வமான, ஆர்வம் தூண்டும் வகையில் பங்குகொண்டோர் பேச, சீராக நடைபெற்றது மன்றத்தின் மூன்றாவது நிகழ்ச்சி. ஜோஹோ நிறுவனத்தின் சிந்தனையாளர் ராஜேந்திரன் தண்டபாணி கண்ணி நுண்ணறிவின் வளர்ச்சியையும், அதனின் எதிர்காலத்தைப் பற்றியும் விவரித்தார். உலக சதுரங்க சேம்பியன்களை தோக்கடிப்பதிலிருந்து,…
Read moreதமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுள்ள, ஒத்த பார்வையுள்ள சிந்தனையாளர்கள் கூடும் ஓர் தளமாக இயங்குகிறது 'மன்றம்’. வாழ்வின் பல்வேறு கட்டங்களில், வேறுபட்ட அனுபவங்களை சந்தித்து அவற்றை பற்றி ஆழ்மையாக சிந்தித்த பலர் அவர்களின் எண்ணங்கள் மற்றும் பாடங்களை பகிர்ந்துகொள்ளும் ஓர் வாய்ப்பாக மன்றத்தின் நிகழ்ச்சிகள் விளங்குகின்றன. மன்றத்தின் உரையாடல்கள் ஆக்கபூர்வமாகவும், பயனுள்ளதாகவும் விளங்கும். மன்றத்தின் மூன்றாவது நிகழ்ச்சி வரும் நவம்பர் 17, சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சி பூங்கா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் நபர்கள்: பார்த்தசாரதி ராமானுஜம், யோகா பயிற்ச்சியாளர் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர்: பாரத்தின் அழைப்பு ராஜேந்திரன் தண்டபாணி, தீர்வுகாணபவர், ஜோகோ: கணினி நுண்ணறிவு ஷோபா மேனன், நிறுவனர், நிழல்: நிழலில் பிறந்த ஒளி சி கே குமரவேல், இணை நிறுவனர், நேச்சுரல்ஸ்: சின்ன படிகள், பெரிய கதவுகள் தஸ்லீம் பர்ஸானா, அரங்காவலர், திவ்ய ராஸா ட்ரஸ்ட்: சில…
Read moreபல்லவபுர நகராட்சியின் கீழுள்ள 42 வார்டுகளில் கடந்த மூன்று வாரங்களாக பல சுகாதார சீர்கேடுகள் நடைப்பெற்று வருகிறது. நகராட்சியின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே குப்பைகளை சரியாக அப்புறப்படுத்தாமலும், குப்பைகளை முறையாக மேலாண்மை செய்யாமலும் அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர். பல தெருக்களில் வீட்டுக்கு வந்து குப்பைகளை சேகரிப்பது முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் எப்போதுமிருக்கும் குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் பலரும் குப்பைத்தொட்டி இருந்த இடங்களில் எப்போதும் போல குப்பையை கொட்டி வருகின்றனர் அதை சரிவரக் கையாளாததால் சாலைகளில் பறந்தும் சுற்றுப் பகுதிகளில் துர்நாற்றம் வீசியும் சுகாதார சீர்கேட்டுக்கு வித்திடுகிறது.பல தெருக்களில் தொடர்ந்து குப்பைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டு வ௫கிறது. இதை பற்றி சுகாதார அதிகாரியான (Sanitary Officer) தி௫ செல்வராஜ் அவர்களிடம் பல முறை புகார் அளித்த போதும், செய்கிறேன், பார்கிறேன் என்ற பதில் மட்டுமே அவரிடமிருந்து வ௫கிறது ஆனால் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. இச்சூழலுக்கு காரணம் பல்லவபுர…
Read moreஎன் ஞாயிற்றுக்கிழமையை நீ பாழாக்கி விட்டாய்! ஊருக்கு வந்த ஒரு பழைய நண்பரை சந்திக்க காத்திருந்த நாள். நான் தென் சென்னையிலும் அவர் வட சென்னையிலும் தங்கியிருந்ததால், என் சொந்தவூர் என்று பெருமையாக நினைக்கும் இந்த ஊரை சுற்றி போக்குவரத்து நெரிசலின்றி, நிம்மதியாக, இனிமையான பயணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லாம் வீட்டை விட்டு வெளியேறும் வரை தான், வெளியேரியபின் எல்லாமே வேறு மாதிரி. என் வண்டியை வெளியே எடுத்து, கியர் போட்ட பிறகு எல்லாம் ஒரு பயமுறுத்தும் அனுபவமாக மாறியது. நகர்வாசிகளுக்கு சேவை செய்ய கடமை பட்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை முற்றிலும் நிராகரித்து, நகரமே குத்தகைக்கு வண்ணம் தீட்ட விட்டாற்போல் காட்சியளித்தது. ஆமாம் உங்கள் தலைவர் நூற்றாண்டு தான், ஆனால் பொது இடங்களை உங்கள் கட்சியின் சொந்த இடம் போல உபயோகிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்கள் தலைவர் உயிரோடு இருந்தால் உங்கள் அரசியல் விசுவாச ஆரவாரங்களை பார்த்து அவருக்கே பொறுக்காமல்…
Read moreபோக்குவரத்து காவல் துறை Vs குடிமக்கள் : பொறுப்பு மற்றும் உரிமை சமீபத்தில் போக்குவரத்து காவல் அதிகாரி லஞ்சம் கேட்டு ஒரு இளைஞரை அடித்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு அதன் தொடர்ச்சியாக காவல்துறை ஆணையர் பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல் கூறியது அனைவரும் அறிந்ததே. போக்குவரத்து அதிகாரிகளுக்கும் ஓட்டுனர்களுக்கும் நடக்கும் இது போல சம்பவங்கள் புதிதல்ல. இதற்கு முன் வலை பதிவில் உலா வந்த வீடியோ ஒன்று, தலைகவசம் அணியாததற்காக காவல் துறை ஒன்று நபரை அடித்து உதைத்த விதத்தை சுட்டி காட்டியது. இது போன்ற தருணத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும், நம் உரிமை மற்றும் பொறுப்பு ஆகியவற்றை அறிந்து கொள்வதன் மூலம் மேலும் இந்த நிகழ்வுகளை இனியும் நடக்காமல் தடுக்க முடியும். என்ன செய்ய வேண்டும்: சரியான அதிகாரியால் தான் நீங்கள் நிறுத்தப்பட்டுள்ளீர்களா என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அதிகாரிகள் சீருடையில் இருப்பதோடு அவர்களின் பெயர்…
Read moreஉறுப்பு தானத்தில் முன்னோடியாக திகழ்கிறது நம் தமிழ்நாடு. இங்கு தான் அதிகமாக உறுப்பு தானம் செய்பவர்கள் உள்ளனர். மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சி மற்றும் மக்களின் விருப்பம் ஆகியவை இதற்கு காரணிகளாக இருக்கலாம். இருப்பினும் நம்மில் பலருக்கு உறுப்பு தானம் பற்றிய பல விஷயங்கள் தெரியாமல் தான் உள்ளது. இதுவே உறுப்பு தானத்திற்காக காத்திருக்க வேண்டிய அவகாசத்தை அதிகரிக்க செய்கிறது. ஒவ்வொரு வருடமும் உறுப்பு கிடைக்காததால் கிட்டதிட்ட ஐந்து லட்சம் பேர் இறந்து போவதாக என்டிடிவி-ஃபார்டிஸ் மோர் டூ கிவ் விழிப்புணர்வு பிரச்சாரம் கூறுகிறது. பல்வேறு தவறான புரிதல் காரணமாக உறுப்பு தானம் செய்வதில் மக்களுக்கு தயக்கம் இருப்பதையே இந்த பிரச்சாரம் உணர்த்துகிறது. மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆர்வலர்களுடன் உரையாடியதிலிருந்து உறுப்பு தானம் குறித்த விளக்கமும், அது குறித்து பல சந்தேகங்களையும் இங்கே தெளிவு படுத்தியுள்ளோம். மேலும் ஏன் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற முக்கிய கேள்விக்கான…
Read more“கடந்த பத்து வருடங்களாக எல்லோரையும் சூரிய எரிசக்திக்கு மாறும் படி வலுயுறுத்தி வருகிறேன். இது நான் எடுத்த சிறந்த முடிவு. இது எவ்வளவு எளிதானது என்பதை மக்கள் உணர்ந்தால், அவர்கள் நிச்சயம் முயற்சிப்பார்கள். அதற்கான மனம் தான் தேவை” என்கிறார் சென்னைவாசி டி சுரேஷ். சூரிய எரிசக்தி பற்றி சென்னை மற்றும் தமிழ்நாட்டு மக்களிடையே எடுத்துச் செல்லும் இவரது முயற்சிக்காக இவர் சோலார் சுரேஷ் என்றே அழைக்கப்படுகிறார். க்ரீன்பீஸ் மற்றும் ஜெர்மி (Greenpeace India and GERMI) நடத்திய Rooftop Revolution: Unleashing Chennai’s Solar Potential ஆய்வின் படி சென்னையில் 1.38 GW (கிகாவாட்) அளவுக்கு சூரிய மின்சக்தி தயாரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் இதுவரை இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறுகிறது. மேலும், வீட்டு கூரை மேல் சூரிய மின்சக்தி அமைப்பின் மூலம் 586 MW (மெகாவாட்) கிடைக்கும் என்றும் இது மொத்த அளவீட்டில் 46% ஆகும் எனவும்…
Read moreஅன்புள்ள பெற்றோர்களுக்கு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பதினோரு வயது சிறுமி பற்றிய செய்தியை படித்ததும் என்னைப் போலவே நீங்களும் அதிர்ச்சி அடைந்திருப்பீர்கள். இருபத்தி இரண்டு ஆண்கள், சிலர் தாத்தா வயதுடையவர்கள், தொடர்ந்து ஏழு மாதங்களாக இந்த கொடுமையை செய்திருக்கிறார்கள். இதை பற்றி அணுளவும் தெரியாமல் பெற்றோர்கள் இருந்துள்ளனர் என்பதை தான் ஜீரணிக்க முடியவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முதலில் பெற்றோரிடம் தான் உள்ளது – பிறகு தான் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோறின் சிறிய பங்கு. இன்றைய சூழலில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை பற்றி முதலில் பெற்றோர்கள் அறிந்து வைத்திருந்தால் மட்டுமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்களா என்று அறிந்து கொள்ள முடியும். வருமுன் காப்பது என்றுமே சிறந்தது, ஆகவே, நான் பெற்றோர்களுக்கு சொல்வதெல்லாம் உங்களால் இயன்ற அளவு குழந்தைகள் இது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதே போல் அத்தகைய…
Read more